என்னுள் கரையாமல் கலந்து வாழும்
என் அழகிய காதலே, என் உயிரின் பாதியே
குறுஞ்செய்தியில் வந்த வார்த்தைகள்
ஒவ்வொன்றாய் படிக்க படிக்க
அற்ப உயிர் கலங்கி - வலி
நிறைந்து விழி வழிந்தோடுதே
அன்று ஆறுதல் தந்த உன் வார்தைகள்
இன்று உன் மடி சேர்ந்து - ஆறுதல்
பெற ஏங்கும் குழந்தையாய் மாற்றுதே
என்னை நான் வெறுக்கும் படியாக்குதே
தோற்றுப்போன உறவாய் இருந்தாலும்
பரவாயில்லை - நான் துரோகம் செய்த
உறவாய் மாறிவிட்டேனே
என் ஆசைகள் விரித்த கிளைகள்
உன் இதயத்தை கிழித்து விட்டன- ஆசைகளையும்
என்னையும் மண்ணித்துக் கொள்
காலத்தால் ஒன்றான நம் உயிருக்கு
ஆறுதலாய் ஒரு வார்த்தை
நிம்மதியாய் ஒரு தூக்கம் வேண்டுமே
இனி எத்தனை காலம் சென்றாலும் - உன்
கரம் மட்டும் பற்றிப்பிடித்து கடைசிவரை வாழ்வேன்..

0 comments:
Post a Comment