Saturday, April 30, 2016

உந்தன் காதலை...


மீள முடியாத சோகங்களும்
திகட்டாத முத்தங்களும்
என்றும் அவள் புன்னகையும்
உயிர் பிரியும் வரை உள்ளிருக்கும்

தேடிக்கிடைத்த உறவு இன்று
வாட வைத்து போகும் போது
கண்ணீரும் அவளைப் பாடுதே
மனம் அவள் கால் தடத்தை தேடுதே

அவளை நேசித்த அளவு கூட - நான்
மென் காற்றை சுவாசிக்கவில்லை
காலம் என்னை கடந்து போக
அவள் காதலும் கடந்து போனது

உடல் மட்டும் இங்கே வாழ
உயிர் ஏன் அவள் தடம் தேடி ஓடுதோ
அறிவற்ற உயிருக்கு - அவள்
மட்டும் போதுமென்ற எண்ணமோ

காதல் தரும் இனிய நினைவுகளில்
சில ஏமாற்றங்கள் - இங்கு அவள்
காதல் மொத்தமும் ஏமாற்றமே

இனியும் இனியவை எதுவுமில்லை
எந்தன் வாழ்வில் - அவளின் சுவடுகளை
அழிக்க முயன்றும் தோற்கிறேன்

இரவல் தந்த உயிரை என்று
இறைவன் திருப்பிக் கொள்வான்
தினமும் அதயே எதிர்பார்க்கிறேன்

அன்பான உறவாய் அன்றாடம் நினைப்பேன்
உன்னையல்ல, உந்தன் காதலை...



0 comments:

Post a Comment