Saturday, June 4, 2016

கண்ணீரினுள் என்னை தொலைக்கிறேன்...


நித்தமும் உன்னை நினைக்கிறேன்
என் நினைவுகள் உன்னில் இருக்குமோ
என்ற கேள்வியில் தான் எந்தன்
இமைகளை சற்று திறக்கிறேன்

காலம் அது கடந்து செல்கிறது
நம் காதல் அதில் பயணம் செய்கிறது
நாட்களும் உன்னை பிரித்துச் செல்கிறது
நினைவுகளாய் நம்மை நிலைக்கச் செய்கிறது

விண்ணில் பறந்து எங்கோ செல்கிறாய்
அங்கும் என் நிழல்கள் உன்னை தொடருமே
இனி வெறும் நிழலாய் மட்டும் தொடருவேன்
கண்ணீரினுள் என்னை தொலைக்கிறேன்

உன்னோடு சேர்ந்த நேரங்கள்
என் வாழ்வின் முதல் அனுபவம்
ஆசைகள் கடந்த வேளைகள் என்றும்
மறவாது வாழ்கின்ற வலிகள்

இனியவை மட்டும் பகிர்ந்திடாதே
என்னை மறந்து இருந்திடாதே
கனவுகள் என்றும் கானல்தான்
நம் வாழ்வு அதற்கின்று சான்றுதான்

உனக்குள் உயிர் தர வேண்டும்
என்றும் உனக்கு உயிராய் இருக்க வேண்டும்...

0 comments:

Post a Comment