Wednesday, May 4, 2016

இது என்ன மாயமோ..


நன்றி என்று சொல்லத்தோன்றும்
வேளைகளில் எல்லாம் - ஒரு
சிறிய முத்தமிட ஏக்கம் கொள்ளும்
அன்பான உள்ளங்களாய் இருக்கச் செய்யும்
காதல், இது என்ன மாயமோ..

வானவில் பார்க்கும் போதும்
வான் பிறை பார்க்கும் போதும்
என் முகம் பார்க்கும் போதும்
அவள் முகம் காட்டி என்னை ரசசிக்கச் செய்யும்
காதல், இது என்ன மாயமோ..

நேரிலே அவள் நின்றாலும் - நெருங்கிட
அச்சம் கொள்ளும் உள்ளம், அது
காரிருள் வேளையில் போர்வைக்குள் - காதோரம்
கைப்பேசி வைத்து வார்த்தைக்கு பஞ்சமே
இல்லாமல் மதி முழுக்க அவள் நினைவிலே பேசச் செய்யும்
காதல், இது என்ன மாயமோ..

கனவிலே ஒரு வாழ்க்கையும் - விழித்ததும்
அதன் ஏக்கமும் கொள்ளை எண்ணமும்
தந்துவிட்டு அடுத்த உயிர்கள்
இரண்டை இணைக்க அயராமல் ஓடும்
காதல், இது என்ன மாயமோ..

எத்தனை கோடியில் பெண்ணிருக்க
என் மனம் தேடி பிடித்த பெண்ணிவள்
உள்ளத்திலே என்னைப் பதித்து வைத்த
காதல், இது என்ன மாயமோ..

தொப்புல் கொடி இல்லாமல் தெடரும் பந்தம்
பெண்ணுக்கு தொப்புல் கொடி உறவைத் தரும் பந்தம்
காதல், இது என்ன மாயமோ...


0 comments:

Post a Comment