விடை என பகிரும் முத்தங்களும்
காதலில் நமக்கு மீதமடி
கண்ணீர் துளி மட்டும் வாழுதடி
கிழிஞ்சலாய் போன நினைவலைகள்
காயங்கள் தந்த வார்த்தைகள்
ஏமாற்றங்கள் எல்லாம் - என்றும்
பேசும் தனிமை மட்டும் துணையானதடி
வழுக்கியே விழுந்தேன் உன்னிடத்தில்
சிறிது தயக்கமே இன்றி உன் மடியில்
வாடியே இருப்பேன் உன் முகம்
காணாமல் ஒரு நாள் விடிந்தால்
சாலையில் போகும் பெண்களில்
உன் முகம் தேடியே பார்க்கிறேன்
காணாத முகங்களும் காண்கிறேன்
கண்மணி உன்னையே எதிர்பார்க்கிறேன்
கடிதமும் காதலைச் சொல்லலாம்
கண்ணீரும் பல வேதனை சொல்லலாம்
சொல்லாமல் வந்த காதலை
நாம் சுவர்க்கமாய் மாற்றிட வேண்டுமடி
உன்னில் என்னுயிர் இன்னொன்று விதைப்பேனடி
அமைதி மட்டும் சூழ ஆனந்தமாய்
உன்னருகில் வாழ்ந்திடுவேனடி உன் மனதின் மத்தியில்...
அமைதி மட்டும் சூழ ஆனந்தமாய்
உன்னருகில் வாழ்ந்திடுவேனடி உன் மனதின் மத்தியில்...

Nice one
ReplyDeletethank you..
DeletePlz share :)