Saturday, May 14, 2016

நினைவாய் மட்டும் வாழ்கிறாள்...


மழை வெள்ளம் காண முன்
சிறு தூரலாய் நெஞ்சில் சந்தோஷம்
தருகிறாய் - தவித்திருக்கும் எனக்கு
உன் புன்னகையால் நிம்மதி தருகிறாய்

விடையே கிடைக்காத வினா ஒன்று
விடியலே இல்லா இருள் ஒன்று
உன் எண்ணங்கள் நிறைந்த மனம் ஒன்று
தனிமையில் துயில் நீங்கி விழிக்குதே

ஆயிரம் கேள்விகள் மனதில்
ஆனால் கோடி பதில்கள் உன்னில்
ஏனோ வானிலை போல் மாறுதோ
மனமும் உன் தடம் தேடி ஓடுதோ

தேயாத இரவுகள் தந்த காயாத கண்ணீரும்
மாறாத நினைவுகள் தந்த உன் அழகிய
புன்னகையும் - ஏன் ஒன்றாக கலந்து
ஓயாமல் இருளில் வாடச் செய்கிறது

நெருங்கி வந்து சில முத்தங்கள்
அது கானலாய் மறையும் காட்சிகள்
பார்வையில் வந்து செல்லுதே - உன்னை
பார்த்த இடத்தில் மீண்டும் தேடுதே

நீ அருகில் அமர்ந்த நொடி - இதயம்
துடித்த வேகம் உயிரே போகும்
அளவு வாங்கிய மூச்சுக் காற்று இன்றும்
நினைக்க தோன்றுதே, நினைவாய் மட்டும் வாழுதே

தயங்கிய சில தருனங்கள் - ஆனால்
தயங்காமல் வாழ்ந்த பல நினைவுகள்
நம்பிக்கை தந்த வார்த்தைகள் - ஏனோ 
நம்மிடம் இன்று இல்லாமல் போனது

என்னுள் என்றும் உன் நினைவுகள் - உதிரம்
என்னுள் ஓடும் வரை, விடியலின் திசை மாறும் வரை
இரு அலைகள் கட்டித்தழுவும் வரை
உயிராய், உணர்வாய் வாழ்ந்து கொண்டே இருக்கும்...

0 comments:

Post a Comment