தூரங்கள் தெரியவில்லை காதலி
காதினில் ஒலிக்கையில்
நான் இன்று தேடினேன் அவளது
ஆனந்த புன்னகையை
விளைவுகள் சிறியவை காதலில்
காத்திருப்பு பெரியது
ஓடாக தேயலாம் நாம் காதலால்
அது காடாக வளர்ந்திட
மின்னலாய் ஆனந்தம் அடிக்கடி
சிறு தூரலாய் கண்ணீர் துளி
மழையென பொழியும் முத்தங்கள்
எச்சிலை சுவைக்கும் தருனங்கள்
நடக்காத பல ஆசைகள் சோகத்தை
தந்திடும் வேளைகள்
கிறுக்கலாய் ஒரு சிறு கவிதையும்
நம் மனதை சொல்லிடும் அவளிடம்
செய்ததை மாற்றிட முடியாது
மாந்தர் அறிவினிலும் அதற்கிடம் கிடையாது
கேள்விகள் பல கோடி இருக்கலாம்
இறைவன் ஒருவனே பதிலையும் கொடுக்கலாம்
கோபம் என்மேல் கொள்ளாதே
கண்மணி உன் காதோரம் மூச்சுக்காற்றுப்பட
தூங்குவேன் - உன் மூச்சை என்னுள் வாங்குவேன்
தூரம் அது தொலைந்தே போகட்டும்...

Super
ReplyDeleteThank You :)
DeleteSuper
ReplyDeleteMelted
ReplyDeleteThank You
DeleteNice
ReplyDeleteNice
ReplyDelete